வேலூர் திமுக அலுவலகத்தில் இஸ்லாமிய புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
திமுக அலுவலகத்தில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வேலூர் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக மத்திய மாவட்ட செயலாளருமான நந்தகுமார் தலைமையில் இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சகி ஆகியோர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு நோன்பு கஞ்சி பழங்கள் உள்ளிட்ட உணவுகளை உண்டு நோன்பை திறந்தனர்.
CATEGORIES வேலூர்
TAGS Dmkஅணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார்இஸ்லாமிய ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுகமுக்கிய செய்திகள்ரமலான் நோன்புவேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகம்வேலூர் மாவட்டம்