BREAKING NEWS

ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.

ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்த 22 ஐம்பொன் சிலைகளும் 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவை, இதுவரை இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளதால், ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தி இருக்க கூடும் என கூறப்படுகிறது.

 

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைமை வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மே மாதம் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக கோவிலை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

 

 

இந்நிலையில் யாகசாலை அமைப்பதற்காக மண் எடுக்க கோயில் உட்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோன்டியபோது 2 அடியில் புதைந்திருந்த ஐம்பொன் சிலைகளான விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, அம்பாள், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட 22 ஐம்பொன் சிலைகளும், அரை அடி முதல் 2 அடி உயரம் உடையது.

 

 

மேலும் 400க்கும் மேற்ப்பட்ட திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற சீர்காழி பதிகம் தாங்கிய தேவார செப்பேடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது, அதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,இவைகள் அனைத்தும் 13 ம் நூற்றாண்டு காலத்துக்குரிய சிலைகள் எனவும்,பூமிக்கு அடியில் கிடைத்துள்ளதால் இவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானது.

 

 

அதனை பறிமுதல் செய்து அரசு கருவுலத்தில் வைக்க வட்டாச்சியருக்கு உத்தரவிட்டார்,மேலும் தருமபுரம் ஆதீனம் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைத்துள்ளதால் அவைகள் அனைத்து சட்டநாதர் கோவிலுக்கே சொந்தம் என ஆட்சியரிடம் கூறினார், அதற்கு ஆட்சியரின் பதில் தொல்லியல்துறை மூலம் உரிய ஆய்வு செய்த பிறகே சோழர் காலத்து சிலையா?

 

 

அல்லது தருமாபுரம் ஆதீனத்துக்கு சொந்தமா? என தெரிய வரும் எனவும் அதன் பிறகே அந்த சிலைகள் யாரிடம் ஒப்படைக்கலாம் எனவும் அல்லது அந்த சிலைக்கு உரிய ஆவணங்கள் தருமபுர ஆதீனத்தில் இருந்தால் அதனை ஆய்வு செய்த பிறகே யாரிடம் ஒப்படைபது என தெரிய வரும் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்து சென்றார்.

CATEGORIES
TAGS