BREAKING NEWS

குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அரசு அதிகாரி..!!, குறை தீரும் என நம்பி வந்த மக்கள் குமுறல்!

குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அரசு அதிகாரி..!!, குறை தீரும் என நம்பி வந்த மக்கள் குமுறல்!

வேலூர் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி வழிந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

 

வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்படும் பலரின் மனுக்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் வாரந்தோறும் மனு கொடுப்பவர்கள் உள்ள நிலையில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 351 மனுக்களை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இடம் நேரில் அளித்தனர்.

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டும், சிலர் தூங்கியும் வழிந்தனர். அதிலும் ஒரு அரசு அதிகாரி, மற்ற அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறட்டை விட்டு தூங்கி வழிந்தது மக்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தியது.


தங்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே குறைதீர் கூட்டத்தில் இப்படி தூங்கி வழிவதால் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? என்ற சந்தேகத்துடன் , அதிகாரிகள் ஏதோ கடமைக்கு வந்து செல்கிறார்கள் என நினைத்து மனுவை கொடுத்து விட்டு தங்களின் நிலையை நொந்து கொண்டு சென்றனர்.

CATEGORIES
TAGS