ஒடுகத்தூர் அருகே மின்சார தாக்கி பலியானவரின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள்.

சடலத்துடன் சாலையில் நின்று போலீசாருடன் வாங்குவதம்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அருகே உள்ள கத்தாரிக்குப்பம் கிராமத்தில் நேற்று கொய்யகாய் பறிக்க சென்ற நடேசன்(55) என்ற கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதனையடுத்து இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து இன்று சடலத்தை உறவினர்களுடன் ஒப்படைக்க சென்ற போது அங்கு இருந்த உறவினர்கள் போலீசார் முறையாக விசாரனை செய்ய வில்லை என கூரி சடலத்தை வாங்க மறுத்து போலீசாருடன் நடுரோட்டில் நின்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்ப்படாத நிலையில் வலுக்கட்டாயமாக சாலைமறியலில் இருந்தவர்களை அப்புரப்படுத்தி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.