எடப்பாடி அணிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதிக்கீடு அம்மாபேட்டையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தஞ்சை மாவட்டம்; எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அணிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதிக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து அம்மாபேட்டையில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஓ.ஏ.ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் அவைத்தலைவர் செல்லப்பா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணை தலைவர் திருமாவளவன், ஊராட்சி செயலாளர்கள் முருகானந்தம், ரவிச்சந்திரன், பரமசிவம், தனபால் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்
TAGS அதிமுகஅரசியல்எடப்பாடி பழனிச்சாமிதஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்