ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள மருந்து கடையை இரண்டாவது முறையாக அடித்து நொறுக்கிய 5 பேர் கொண்ட கும்பல்.

சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருந்து கடை உரிமையாளருக்கு பல்வேறு வகையில் கொலை மிரட்டல் வருவதாகவும் எம்எல்ஏ வில்வநாதனின் ஆட்கள் மறைமுகமாக உடந்தையாக இருப்பதாக மருந்து கடை உரிமையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். மற்றும் இவரது தம்பிகள் சுரேஷ் மற்றும் ராஜி ஆகியோர் நேதாஜி சாலையில் நகர காவல் எதிரில் உள்ள உமருல்லா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மருந்து கடை வைத்து நடத்தி வந்துள்ளனர்.
மேலும் அதே கட்டிடத்தில் மற்றொரு மருந்து கடை உள்ளிட்ட மூன்று கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் கட்டிடம் விற்பனை தொடர்பாக கட்டிட உரிமையாளருக்கும் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில்,
ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் உறவினரான பள்ளித்தெரு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கு விற்று விட்டதாகவும் அப்போதே கட்டிட உரிமையாளர் கட்டிடம் பிரச்சினையில் இருப்பதால் விற்பதை தாமதம் செய்த போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என எம்எல்ஏவின் உறவினர்கள் வற்புறுத்தலின் பேரில் விற்று விட்டதாக கூறப்படுகிறது.
அப்போது கட்டிடத்தில் இயங்கி வந்த மருந்து கடை மற்றும் உள்ளிட்ட மூன்று கடைகள் வேறு இடத்திற்கு மாற்ற முன்னறிவிப்பின்றி கட்டிடத்தை விற்பனை செய்ததால் தாங்கள் கடையை காலி செய்யும் வரை கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதனின் உறவினர்கள் மருந்து கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களையும்,
கடைக்கு மருந்து வாங்கி செல்பவர்களையும் கண்டுகொள்ளாமல் கட்டிட மேல் மாடியை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சிமெண்ட் கற்கள் மருந்து கடையில் இடிந்து விழுந்து கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் மீது விழுந்து காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் துறையில் புகார் அளிக்கபட்டுள்ள நிலையில் கடையின் மேல் மாடியை இடித்த போது மருந்து கடையின் கூரை ஓட்டை விழுந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் மருந்து கடைக்குள் மழைநீர் புகுவதால் மருந்துகள் சேதம் ஆகிவிடும் என்பதால் காவல்துறை அனுமதி பெற்று கடையின் மேற்கூரை ஓட்டையை அடைப்பதற்காக இன்று கட்டிட மேஸ்திரி பணிபுரிந்து கொண்டிருந்தபோது,..
இரண்டாவது முறையாக காரில் வந்த எம்எல்ஏவின் உறவினரான சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது மகன் சந்திப்குமார் மருத்துவர் சங்கீதா அவரது கணவர் நவீன்குமார் ஞானசேகரன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மருந்து கடை உரிமையாளர் சுரேஷ் என்பவரின் தம்பி ராஜீ மற்றும் கட்டிட மேஸ்திரி ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு மருந்து கடையில் முன்பக்கம் உள்ள பொருட்கள் மற்றும் பெட்டிகளை உடைத்து மருந்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த ராஜீ ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆம்பூர் நகர காவல் துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்பூர் நகர காவல் நிலையம் எதிரிலேயே மருந்து கடை பிரச்சனை தொடர்பாக இரண்டாவது முறையாக காரில் வந்த நபர்கள் இருவரை தாக்கி மருந்து கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.