BREAKING NEWS

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து; வேலூர் ஆட்சியர் அலுவலக முன்பு 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்.

10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து;  வேலூர் ஆட்சியர் அலுவலக முன்பு 400-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்.

வேலூர் மாவட்டம்; 

அங்கன்வாடி ஊழியர்களின் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுப்பு வழங்கிட வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுப்பு வழங்கிட வேண்டும்,

அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் 26 ஆயிரம் விளங்கிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பாக இரண்டு அல்லது மூன்று மையங்கள் கொடுப்பதை கைவிட்டு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்,

பத்து ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS