லத்தேரியில் சொத்தில் மனைவியின் பங்கை தனக்கு கேட்டு கொடுக்காததால் தூங்கிக்கொண்டிருந்த மாமனாரை கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்த மருமகன் கைது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகரை சேர்ந்தவர் முதியவர் செல்வம் (வயது 62). கூலி தொழிலாளியான இவர் மகள் ஜெயலட்சுமி மற்றும் மருமகன் பிரபாகரனுடன் வசித்து வந்த நிலையில் நேற்று காலை செல்வம் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இன்னும் சம்பவம் தொடர்பாக லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லத்தேரி காவல் நிலையத்திற்கு முதலில் தகவல் தெரிவித்த செல்வத்தின் மருமகன் பிரபாகரன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால்,பிரபாகரனை விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்தனர்.
அப்போது பிரபாகரனிடம் போலீசார் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில், இறந்து போன செல்வத்தின் பெயரில் உள்ள 71 சென்ட் நிலத்தில் விவசாயம் செய்ய கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்ச மருமகன் என்ற முறையில் பிரபாகரன் கால்வாய் தோண்டியதும், அதனால் மாமனார் செல்வத்துடன் பிரபாகரனுக்கு தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது.
அந்த சமயம்( கடந்த 25ம் தேதி) இரவு சுமார் மது போதையில் இருந்த, செல்வத்தை பிரபாகரன் கீழே தள்ளி கல்லால் அடித்து கொடூரமாக செல்வத்தை கொலை செய்து இறந்த நிலையில், பிரபாகரன் ஒன்னும் செய்யாதது போல் மறுநாள் காலை அங்கேயே இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், சம்பவம் குறித்து சந்தேக மரணம் என லத்தேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரபாகரனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
நிலத்தில் விவசாயம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் மாமனாரை மருமகன் கொலை செய்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் இருந்த மருமகனின் செயல் மற்றும் காவல் நிலையத்திற்கு பின்புறமே கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது லத்தேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.