காட்பாடி அமைச்சர் தொகுதியில் குறைந்த அளவு மழையிலே குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் குடியிருப்பு வாசிகள்அவதி,

வேலூர் மாநகராட்சி 1 வது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி கழிஞ்சூர் EB காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் மழைக்காலங்களில் சிறிதளவு மழை பெய்தாலும் அங்குள்ள வீடுகளில் மழை நீருடன் கழிவு நீர்களும் கலந்து வீடுகளில் புகுந்து கிருமிகள் உருவாகி நோய்கள் பரவுமா என்கிற பயத்தில் குடியிருப்பு வாசிகள் தள்ளப்படுகின்றனர்.
இது போன்ற நிகழ்வுகள் பல வருடங்களாக தொடர்கின்றன, இது போன்ற நேரங்களில் புகார் தெரிவிக்க தொடர்பு கொண்டால் அரசு அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் கண்டு கொள்வதில்லை, இதனால் பொதுமக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.
நீர்வளத் துறை அமைச்சர் தொகுதியிலேயே வீட்டுக்குள் மழைநீர் புகார் நிலை மாறி மழைநீர் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா, மன வேதனையில் சொல்லித் துடிக்கும் குடியிருப்பு பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.