BREAKING NEWS

காட்பாடி அருகே சாலை அமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நட்டு நூதன போராட்டம்.

காட்பாடி அருகே சாலை அமைக்க கோரி சாலையில் தேங்கியுள்ள நீரில் நாற்று நட்டு நூதன போராட்டம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66 புதூர் கிராமம் உள்ளது இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயத்தை தொழிலாக நம்பி விவசாயம் செய்து அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் அப்பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படவில்லை எனவும்,..

இது குறித்து பலமுறை காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகத்திடமும் முறையிட்டும் இதுகுறித்து எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள பெண்கள் சேரும் சகதியமாக உள்ள சாலையில் இறங்கி நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் உள்ளிட்ட எந்த குடிநீர் ஆதாரமும் இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

 

மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் பஞ்சாயத்து அலுவலகத்தை கூட்டு பூட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் மேலும் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS