BREAKING NEWS

அம்மாபேட்டை வட்டத்தில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.

அம்மாபேட்டை வட்டத்தில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டார்.

தஞ்சை மாவட்டத்தில் அம்மாபேட்டை வட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆனந்து இஆப தலைமையிலான குழுவினர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நெடுந்தெரு பகுதியில் தேவராயன்பேட்டை வாய்க்கால் காவளூர் பகுதியில் வடக்குராஜன். தெற்குராஜன் வாய்க்கால், வெண்ணுகுடி பகுதியில் ரெகுநாதகாவேரி உள்பட பாசன வாய்க்காலில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

அப்போது விவசாயிகள் சிலர் அதிகாரிகளை நேரில் சந்தித்து திருக்கருகாவூர் பிரிவு வாய்க்கால் மற்றும் வெட்டாற்றை தூர்வாரி தர வேண்டுமென வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து காவளூர் பகுதியில் வெட்டாற்றில் புதர் மண்டிய பகுதிகளை பார்வையிட்டமாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் வெட்டாறு விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.

உடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், காவிரி வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், வெண்ணாறு வடிநிலைகோட்ட செயற்பொறியாளர் மதனசுதாகரன்.

 

உதவி செயற்பொறியாளர் மலர்விழி உதவி பொறியாளர்கள் செல்வபாரதி. சபரிநாதன், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் பொதுப்பணித்துறையினர் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS