மங்களூரில் ஐடிஐ மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி : அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூரில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, மற்றும் புத்தகங்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.
மங்களூரில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் 45- ந்து மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் பாட புத்தகங்களை வழங்கி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
உடன் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மதுபாலன், மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் K.N.T சுகுணா சங்கர், திட்டக்குடி வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அரங்கநாதன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் முதல்வர் அன்பழகன்,
மங்களூர் ஒன்றிய செயலாளர்கள் வட்டார ஆட்மா குழு தலைவர் செங்குட்டுவன் மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், அடரி சின்னசாமி, திட்டக்குடி நகர் மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் அரசு அதிகாரிகள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.