இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி – தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றை காலில் நின்று நூதன ஆர்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கம் ரெங்கநாயகலு தலைமையில் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலக வாயில் முன்பு ஒற்றை காலில் நின்று நூதன போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது தமிழக அரசு உடனடியாக தங்களது பிரதான கோரிக்கையான இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டியோடு இணைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதனையடுத்து கோட்டாச்சியர் மகாலட்சுமியை சந்தித்து மனு அளித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அரசியல்இளையரசனேந்தல் பிர்காகோவில்பட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடி மாவட்டம்தேசிய விவசாயிகள் சங்கம்முக்கிய செய்திகள்