BREAKING NEWS

கோவில்பட்டியில் அருகே தேசிய நெடுஞ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இருவர் சம்பவ இடத்தில் பலி.

கோவில்பட்டியில் அருகே தேசிய நெடுஞ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இருவர் சம்பவ இடத்தில் பலி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கூசாலிபட்டி சேர்ந்த ஏசி மெக்கானிக்கல் அன்பரசு 26),அவரது நண்பர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த கேசவன்(22) இருவரும் திருநெல்வேலி சென்று விட்டு,

 

கோவில்பட்டி நோக்கி வரும் போது கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் விளக்கில் கன்னியாகுமரி டூ மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகன மோதியதில் சம்பவ இடத்தில் ஏசி மெக்கானிக்கல் ஆன அன்பரசு, கேசவன் சம்பவ இடத்தில் பலியானார்கள்‌.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாலாட்டின்புத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS