BREAKING NEWS

ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடம்பூர் ராஜூ கல்வி உபகரணங்களை வழங்கினார்.

ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடம்பூர் ராஜூ கல்வி உபகரணங்களை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அனுக்ஞை விநாயகர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத கொடை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு 100 மேற்பட்ட ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் விழா அதிமுக 16 வது வார்டு செயலாளர் ரமேஷ் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் அய்யனார் 10ம் வகுப்பு தேர்வில் 454 மதிபெண் எடுத்த ஏழை மாணவனுக்கு படிப்பு செலவுக்கு ரூ 5700 கல்வி உதவித்தொகையாக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

இதற்கு முன்னதாக கோவில்பட்டி அருகே தோணுகால் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாச கொடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அப்பாசாமி, நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,

முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், வார்டு செயலாளர் சிங்கராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,வேல்ராஜ்,செந்தில், கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன், கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்,

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS