குடியாத்தம் ஜமாபந்தி நிறைவு விழா!!!

குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் ஆண்டுக்கான ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
துணை தாசில்தார்கள் ரமேஷ், சுபிச்சந்தர், வாசுகி, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர்கள் பலராமபாஸ்கர், மஞ்சுநாதன், சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 25 நபர்களுக்கு ரூபாய் 63 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள்
எஸ்.விஜயகுமார், கே.லோகநாதன், மருத்துவ அலுவலர் மாறன் பாபு, வேளாண்மை உதவி இயக்குனர் உமா சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துரை செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாமிநாதன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.