BREAKING NEWS

குடும்ப கடன் தொல்லையால் மனமுடைந்து மதுபோதையில் ரயில் முன் பாய்ந்த இளைஞர் – சம்பவ இடத்திலேயே கை,கால் துண்டாகி உயிரிழப்பு

குடும்ப கடன் தொல்லையால் மனமுடைந்து மதுபோதையில் ரயில் முன் பாய்ந்த இளைஞர் – சம்பவ இடத்திலேயே கை,கால் துண்டாகி உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் குடும்பத்தின் கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த இளைஞர் மதுபோதையில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வாலாஜாப்பேட்டை அடுத்த ஏகாம்பரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அரிஹரன்(27). சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக குடும்ப கடன் சுமை காரணமாக அதிக அளவில் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

இதில் கை,கால்கள் துண்டாகி உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் நேரில் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS