BREAKING NEWS

வாலாஜாபேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டிடங்களுக்கு வர்ணங்கள் பூசி கொடுத்து உதவி செய்த தனியார் தொண்டு அறக்கட்டளை

வாலாஜாபேட்டையில் அங்கன்வாடி மையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டிடங்களுக்கு வர்ணங்கள் பூசி கொடுத்து உதவி செய்த தனியார் தொண்டு அறக்கட்டளை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட வெற்றிலைகார தெரு மற்றும் ஆற்காடு தெத்து தெரு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் நீண்ட நாட்களாக கட்டிடங்கள் வர்ணம் பூசாமல் இருந்து வந்துள்ளது உடனே இதனை அறிந்த ROTARY CLUB மற்றும் INVEER WHELL CLUB ஆகிய இரண்டு தனியார் தொண்டு அறக்கட்டளைகள் சார்ந்த நிர்வாகிகள் தங்களது சங்கத்தின் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை புதிதாக வர்ணங்கள் பூசி புதுப்பித்துக் கொடுத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து புதிதாக வர்ணங்கள் பூசிருக்கும் இரண்டு கட்டிடத்தை இன்று ROTARY CLUB நிர்வாகிகள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர் பின்னர் மையத்தில் இருந்த அனைத்து குழந்தைகளும் ரோஜா பூக்களை கொடுத்து அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

 

நிகழ்ச்சியில் முன்னதாக அங்கன்வாடி மையத்திற்கு சங்கத்தின் சார்பில் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் சாலை ஓரமாக வியாபாரம் செய்யும் வயதான முதியவருக்கு புதிய தள்ளுவண்டியை பரிசாக வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தனியார் அறக்கட்டளை சார்ந்த நிர்வாகிகள் அங்கன்வாடி ஊழியர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

CATEGORIES
TAGS