BREAKING NEWS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணி ஓய்வில் செல்லும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணி ஓய்வில் செல்லும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் 1986-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் காவல்துறையில் பணியாற்றி வந்த கச்சிராயபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சௌகத் அலி மற்றும் சின்னசேலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குழந்தைவேல் ஆகியோர் இன்றுடன் 30.06.2023 பணி ஓய்வு பெற்றனர்.

 

இவர்களின் பணி ஓய்வை பாராட்டும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மோகன்ராஜ் அவர்கள் பணி ஓய்வு பெற்ற இருவரையும் நேரில் அழைத்து விருது மற்றும் பொன்னாடை போர்த்தி பணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இத்தனை நாட்கள் காவல்துறைக்கு பணிபுரிந்து பணி மூப்பு காரணமாக ஓய்வு பெற்று செல்லும் அனைவரின் பணியும் பாராட்டுதலுக்குரியது என்றும் வரும் காலங்களில் தங்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். 

Share this…

CATEGORIES
TAGS