மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் வேண்டுகோளை ஏற்ற மாவட்டமாற்றுதிறனாளிகள் நல அலுவலர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருவம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாற்றுத்திறனாளிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணியம் விளக்கமளித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளிடமிருத்து நலத்திட்ட உதவிக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் தியாகதுருவம் சுற்று வட்டார்களிலிருந்து 124 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணியம் முடநீக்குயல் வல்லுனர் பிரபாகரன்.
அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் கலையரசன். செயலாளர் குபேரன் உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.