திருநெல்வேலியில் இன்று பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பிளாஸ்டிக் நெகிழிப் பைகளை ஒழிக்க வேண்டி பள்ளியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பேரணி சென்றனர்.
ஒன்பதாவது தமிழ்நாடு சைகை அணி சார்பில் லெப்டினன்ட் கர்னல் TRD சின்ஹா உத்தரவுப்படி இந்தப் பேரணியானது நடைபெற்றது பேரணியை சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் பொறுப்பு ஜோஸ்பின் ஏஞ்சலா துவக்கி வைத்தார்,ராணுவ பயிற்சியாளர்களான சுபேதர் கணேசன் சுபேதர் ஸ்ரீகாந்த் நாயக் சுபேதர் தசரதன் ஹவில்தார் சதீஷ்குமார் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர் இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் என் எஸ் எஸ் பிரவீன் தேவ பிச்சை ஆசிரியர்களான ரவிச்சந்திரன் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர் பேரணி ஏற்பாட்டினை என்சிசி அலுவலர் ஸ்டீபன் ஆபிரகாம் செய்திருந்தார்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS கல்விசாஃப்டர் மேல்நிலைப் பள்ளிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்பிளாஸ்டிக் விழிப்புணர்வுமுக்கிய செய்திகள்