கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவி தற்கொலை. வாலிபர் ஒருவரின் கேலி கிண்டலால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் உள்ள ஏ.என்.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவாடாவைச் சேர்ந்த ராகவி என்ற மாணவி இரண்டு நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை.
கண்ணன்கோட்டையை சேர்ந்த 22 வயது முனுசாமி என்கிற வாலிபரின் கேலி கிண்டலை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
தொடர்ந்து ராகவியின் சொந்த கிராமமான சிறுவாடா கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகம் அருகே கண்ணன் கோட்டையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES திருவள்ளூர்
TAGS அரசு பள்ளி மாணவி தற்கொலைஏ.என்.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளிகண்ணன்கோட்டைகும்மிடிப்பூண்டிகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருவள்ளூர் மாவட்டம்முக்கிய செய்திகள்வாலிபர் ஒருவரின் கேலி கிண்டலால் பள்ளி மாணவி தற்கொலை