BREAKING NEWS

திருப்பூரில் முன்னாள் திமுக நிர்வாகி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.

திருப்பூரில் முன்னாள் திமுக நிர்வாகி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.

திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன் ரியல் எஸ்டேட் அதிபர் அவிநாசியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் முன்னாள் திமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜ் என்பவர் தனது ரியல் எஸ்டேட்டில் உதவி செய்வதாக கூறி சில நாட்கள் உடன் சென்று வந்துள்ளனர்.

அவருடைய நண்பர்களே வைத்துக்கொண்டு இவர் ரூபாய் 30 லட்சம் மோசடி செய்ததாகவும், மேலும் அதைக் கேட்ட பொழுது தனது புகைப்படம் மற்றும் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் ஒரு சிலரின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து ரியல் எஸ்டேட் அதிபரை 50 லட்சம் மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து கடந்த 18/7/2023 அன்று திருப்பூர் நல்லூர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS