துவாக்குடியில் முதல்வரின் கான்வாய் வாகனம் பஞ்சர் ஆனதால் பரபரப்பு – பின்னர் அமைச்சர் கே.என் நேரு வாகனத்தில் தஞ்சை புறப்பட்டு சென்றார்

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று விமான மூலம் திருச்சி வந்தடைந்தார்.
nike air max sale outlet washington nfl team adidas ultraboost shoes nike air max 95 black nike air max 270 mens sale adidas yeezy foam runner onyx nike air jordan shoes custom nba jerseys sex toys for men buffalo bills Jerseys nfl jersey shop custom basketball jerseys adidas shoe sales custom basketball jerseys wig sales
நேற்றைய தினம் நடைபெற்ற டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை சார்பில் அமைக்கப்பட்ட வேளாண் கண்காட்சியினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்து, வேளாண் பொருட்கள், இயந்திரங்கள், ஆகியவற்றினை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஐம்பதாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவை துவக்கி வைத்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தஞ்சையில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சாலை மார்க்கமாக தஞ்சை சென்றபோது திருச்சி துவாக்குடி பேருந்து நிறுத்தம் அருகில் முதல்வரின் கான்வாய் வாகனத்தின் பின்பக்க டயர் பஞ்சரானது.
உடனடியாக வாகனம் நிறுத்தப்பட்டு முதல்வர் மு க ஸ்டாலின் , அமைச்சர் கே என் நேருவின் வாகனத்தில் தஞ்சை நோக்கி புறப்பட்டார். பின்னர் காண்வாய் வாகனம் பஞ்சர் ஒட்டப்பட்டு 20 நிமிடங்களுக்கு பிறகு துவாக்குடியில் இருந்து புறப்பட்டு தஞ்சை நோக்கி சென்றது. முதல்வரின் காண்வாய் வாகனம் பஞ்சர் ஆகி நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது