BREAKING NEWS

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 2000 புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உடன் தங்குபவர்கள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள்,மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நான் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர்.nfl jersey sales nike air max sc men’s adidas for sale nfl jersey sales nike air jordan 4 black canvas cheap nfl jerseys custom design custom team jerseys nike air jordan retro nfl jersey shop cheap sex toys adidas yeezy boost cheap nfl jersey wig stores adidas yeezy 450 

இவர்கள் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கேன்டீன்கள் அமைக்க உரிமம் பெறுவதற்கே தலா 10 முதல் 15 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேண்டின் அமைத்துள்ள மாரிச்சாமி என்பவர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இங்கு கேண்டின்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மூன்று இணைப்புகள் உள்ளதாகவும்,அதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தன்னிச்சையாக துண்டித்ததாகவும்,துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாரிச்சாமி முதல் தவணையாக ரூபாய் 6.5 லட்சம் மற்றும் இரண்டாவது தவணையாக ரூபாய் 3.5 லட்சம் வழங்குவதாக தானே வீடியோவில் கூறி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் வழங்கும் காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளன.இது தவிர அதே வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வரின் குடியிருப்புக்கும் மாரிச்சாமி சென்று கட்டு கட்டாக பணம் வழங்கி உள்ளார்.அது தொடர்பான காட்சிகளும் தெளிவாக பதிவாகியுள்ளன.

மாரிச்சாமியிடம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் ரூபாய் 16 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.மேலும் 16 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மூன்று இணைப்புகளில் ஒரு இணைப்பு மட்டுமே தற்போது வழங்கியுள்ளதாகவும் மீதமுள்ள நான்கு லட்சத்தையும் வழங்கினால் மட்டுமே மீதமுள்ள இரண்டு இணைப்புகளையும் வழங்க முடியவில்லை மீனாட்சி சுந்தரம் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறினர்.

மருத்துவக் கல்லூரி இயக்குனர் (சிறப்பு அலுவலர்)மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராக உள்ள மீனாட்சி சுந்தரம் கட்டுக் கட்டாக லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS