BREAKING NEWS

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற திருவள்ளூர் அரசு பள்ளி மாணவியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த ஜூலை 30-ந் தேதி சென்னை தியாகராயர் கலை அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சிறுகதை எழுதும் போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறுத்தை எழுதினர்.

இந்த போட்டியில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஜெயஜனனி வெற்றி பெற்று சிறப்பு பரிசு பெற்றார்.

இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவி ஜெயஜனனியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Share this…

CATEGORIES
TAGS