கம்பத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கம்பத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் மகளிர் திட்டம் சார்பாக மகளிர் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட மகளிர் திட்ட குழு சி ஓ ரஞ்சிதம் அவர்களின் தலைமையில் கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணியானது கம்பம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலை விதி வழியாக காந்தி சிலை வரை சென்று முடிவடைந்தது.
மேலும் மகளிர் குழுவினர் உறுதிமொழி ஏற்று பேரணியாக சென்று 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பெண்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
CATEGORIES தேனி