BREAKING NEWS

தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் – அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் – அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மகத்தான வெற்றி பெற்று மீண்டும் நிரூபிப்போம் – அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேட்டி

அலங்காநல்லூர், மார்ச்.22-

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமி மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ மஞ்சமலை சுவாமி திருக்கோவிலில் திரளான கட்சி தொண்டர்களுடன் சுவாமி தரிசனம் செய்து நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், சந்தானம், மகேந்திரன், மாணிக்கம், முன்னாள் எம்.பி.பார்த்திபன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி கூறுகையில்.
தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவோம். தேனி தொகுதி அதிமுகவின் கோட்டை அதை தக்க வைக்க முயற்சி எடுத்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தேனி தொகுதியில் இம்முறை மும்முனை போட்டியாக இருந்தாலும் கூட அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சிறு கிளைகள் தான் அவர்களெல்லாம், ஆனால் நாங்கள் ஆலமரம் எப்போதும் மக்களுக்காக காத்திருந்து பல நலத்திட்டங்களை செய்வேன். தேனி தொகுதி அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றி எடப்பாடி பழனிச்சாமிக்கு பரிசளிப்போம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், நகர் செயலாளர்கள் அழகுராசா, குமார், வாடிப்பட்டி அசோக்குமார், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS