
சுதந்திரம் கிடைத்த பிறகு கூட,இந்து ஆலயங்களில் 10% உயர் ஜாதி இந்துக்களை தவிர மற்றவர்கள் செல்ல முடியாத அவல நிலை இருந்தது,அதனால் தான் அரசு தலையிட்டு எல்லோரும் சமம் என்று சொல்லி,எல்லோரும் ஆலய தெருவிற்கும் போகலாம்,ஆலய வழிபாட்டிற்கு செல்லலாம் என்பதை கொண்டு வந்ததால் இன்று 90 சதவீத இந்துக்களுடைய சுயமரியாதைக்காக இந்து அறநிலையத்துறையை அரசு கைவைத்து சிறப்பாக நடத்துகிறது.
இதை அவர்கள் ஏற்கனவே இருந்ததைப் போன்று பத்து சதவீத உயர் ஜாதி இந்துக்களுக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள் நிச்சயமாக தமிழ்நாட்டில் அது நடக்காது, நடக்கவும் ஒருபோதும் திராவிட மாடல் ஆட்சி விடாது எனவும்
முருக மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அகற்றப்படும் என்ற தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
CATEGORIES அரசியல்