BREAKING NEWS

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சருக்கான கோப்பை போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சருக்கான கோப்பை போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்துள்ள மாணவிகளுக்கு பாராட்டு

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் சுமார் 3000ம் மாணவ மாணவியர் களுடன் சிறப்பாக இயங்கி வருகிற கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் பயில்கின்ற மாணவிகள் இந்த ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சருக்கான கோப்பை போட்டியில் கலந்துகொண்டு….

மாநிலத்தில் கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் ….

அந்த மாணவியர்களை பாராட்டி இன்று பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில அளவில் போட்டியில் தென்காசி மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாபன் கலந்து கொண்டு 18மாணவியர்களுக்கு சுமார் 20 ஆயிரம் மதிப்பிலான காலணி தொகுப்பு கள் வழங்கி உரையாற்றினார்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் இந்த பள்ளியின் கோரிக்கையை ஏற்று இந்த பள்ளி ஆதிதிராவிடர் மாணவிகள் தங்கிப் பயிலும் வகையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பெற்றுக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்து பேசினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் குகன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்….

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்….

கால்பந்தாட்ட அணி பயிற்சியாளர் இசக்கி துரை அவர்கள் வரவேற்று பேசினார்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள் ஆலங்குளம் ஒன்றிய துணை பெருந்தலைவர் செல்வக் கொடி ராஜாமணி ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்தம்மாள் புரம் ஆர் பி முருகன் கீழக்கிழங்கு சந்திரசேகர் ஒன்றிய கவுன்சிலர் முருகேஸ்வரி பாலகுமார் முன்னாள் ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால் முன்னாள் பேரைச் மன்ற துணைத் தலைவர் தங்க செல்வோம் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி கிளை கழக நிர்வாகிகள் அந்தோணி இளைஞரணி சிவா முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் ரெட்டியார்பட்டி பிரின்ஸ் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் மகேந்திரன் செல்வகுமார் ராஜேந்திரன் ராமர் ,மாரிஸ்வரன் ,லேத்செல்வன், கருப்பசாமி உள்ளிட்டோர்கள் கலந்துகொண்டனர்

முடிவில் உதவிதலைமை ஆசிரியர் அமிர்தவல்லி அவர்கள் நன்றி கூறினார்கள்

CATEGORIES
TAGS