BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆம்பூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த 2 மயில்கள்.

மயில்களின் உயிரிழப்பை தடுக்க விவசாயிகள் வேலிகளை அமைக்க அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

சுற்றுச்சூழல் ஆர்வலர் கோரிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல் துருகம் காப்புகாடு மலை அடிவாரத்தில் உள்ள பைரபள்ளி கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் இன்று காலை 10கும் மேற்பட்ட மயில்கள் இரைதேடி வந்துள்ளது . பின்னர் சிறிது நேரத்தில் மயில்கள் கூச்சலிட்டபடி அங்கிருந்து பறந்து சென்றுள்ளது. இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்ற கிராம மக்கள் மாந்தோப்பில் இரண்டு மயில்கள் மயங்கி கிடந்ததை கண்டு உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் வனத்துறையினர் மயில்களை சோதனை செய்ததில் இரண்டு ஆண் மயில்களும் இறந்து கிடந்தது தெரியவந்தது இதனைத்தொடர்ந்து இரண்டு மயில்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் மயில்கள் இறந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் மற்றும் வனத் துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )