தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சி துணை தலைவர் கணேசன் பொதுசெயலாளர் ஆனந்தவேல் கல்லூரி முதல்வர் பியூலா ராஜினி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் தினத்தின் சிறப்புகள் பற்றி மாணவிகள் முன்னிலையில் எஎடுத்துரைக்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.பின்னர் மாணவிகள் சார்பாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
CATEGORIES தேனி
