BREAKING NEWS

சென்னை எல்லைச்சாலை திட்டத்தின் மூன்றாம் பகுதி திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெருமந்தூர் வரை 30.1 கி.மீ. தூரம் வரை 2600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலை மற்றும் இருவழி சேவை சாலைக்கான பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கையாக சென்னை எல்லைச்சாலை அமைக்க திட்டமிட்டு எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மகாபலிபுரம் வரை 132.87 கி.மீ. வரை ஐந்து பகுதிகளாக அமைக்கப்பட உள்ள நிலையில், இரண்டு பகுதி பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெருமந்தூர் வரை 30.10 கி.மீ். வரை 2600 கோடி மதிப்பீட்டில் மூன்றாம் பகுதி ஆறு வழிச்சாலை மற்றும் இருவழி சேவைச்சாலை பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் சாலை பணிகளுக்காக மண் அள்ளும் பணிகளை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார்.

முன்னதாக சென்னை எல்லைச்சாலையின் முதல் மற்றும் இரண்டாம் பகுதி பணிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை உதயநிதி பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சிறுபான்மைத்துறை அமைச்சர் சா.மு. நாசர், ஆட்சியர் பிரதாப் மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ வி்ஜி.ராஜேந்திரன், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS