திட்டக்குடி அருகே நூதன முறையில் காத்திருப்பு போராட்டம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் உள்ள புதிய காலனி பகுதி தெருக்களை போர்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் சார்பாக கட்சியின் நிறுவன தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் சேரும் சகதி உள்ள தெருக்களில் அமர்ந்து நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் வீரராஜன்,கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன்,ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார், பாலமுருகன்,
கிளை நிர்வாகிகள் அருணாசலம், சாமிதுரை, மகளிர் அணி சுடர்மணி,சின்னப்பிள்ளை மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்சாலை வசதி வேண்டி போராட்டம்சாலையில் காத்திருப்பு போராட்டம்தமிழக விவசாயிகள் மக்கள் கட்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திட்டக்குடி வட்டம்மங்களூர் ஊராட்சிமுக்கிய செய்திகள்