காஞ்சிபுரம் மாநகர் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் கொண்டாட்ட விழா ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், பொங்கலிட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் முன்னோர்கள் கார்த்திகை மாதத்தில் தனது விளைநிலங்களில் விதை நெல்களை விதைத்து மார்கழி இறுதியில் அறுவடை செய்து அந்த நெல்லை தை முதல் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில் ஒரு பகுதியாக சூரியனுக்கு பொங்கல் படைத்து விழா கொண்டாடுவது வழக்கம்.
அடுத்த நாள் தனது உழவுக்கு உதவும் காளைகளை கௌரவப்படுத்தும் வகையில் மாட்டு பொங்கல் அன்று பொங்கலிட்டு அதனை மாடுகளுக்கு வழங்கி உற்சாகமாக அதனை வண்ணப்படுத்தி வீதிகளில் வலம் வந்து கௌரவ படுத்துவர்.
பொங்கல் திருவிழா விடுமுறை நாட்கள் என்பதாலும் பாரம்பரிய விளையாட்டுகளை கிராமங்களில் இளைஞர்கள் நடத்தி அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கௌரவிப்பதும் ஒரு வகையான வழக்கம்.
அதில் பாரம்பரிய விளையாட்டுக்கான ஜல்லிக்கட்டு, கபடி சிலம்பம் விளையாட்டுகள் , கரகாட்டம் , கட்டை கூத்து கலைஞர்கள் நிகழ்ச்சிகள் என கிராமங்களில் பொங்கல் திருவிழா காலை கட்டும்.
தற்போது விஞ்ஞான காலம் மாறி உள்ளதால் இதனை மெல்ல மெல்ல தமிழர்கள் மறந்து வருவதால் மீண்டும் அது விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜகவினர் நம்ம ஊரு பொங்கல் எனும் தலைப்பின் கீழ் தமிழக முழுவதும் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகர மேற்கு மண்டலம் சார்பாக தமிழர் பாரம்பரிய விழா கொண்டாட்டம் ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் காலை 9 மணிக்கு துவங்கியது.
நம்ம ஊரு பொங்கல் தலைப்பின் கீழ் காலையில் பாஜக மகளிர் அணி சார்பில் பொங்கல் பானையில் பச்சரிசி இட்டு வெல்லம் , முந்திரி , திராட்சை, நெய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் இட்டு தீப வழிபாடு மேற்கொண்டனர்.
கால்நடைகளை சிறப்பிக்கும் வகையில் பசு மற்றும் கன்றுக்கு சிறப்பு கோ பூஜை செய்து வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து சிறுவர் முதல் பெரியவர் வரை கலந்துகொண்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
நாளை பாரம்பரிய கலைஞர்கள் கலந்து கொண்ட கட்டைக்கூத்து நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து சிலம்பாட்ட குழுவினரின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனையடுத்து மாவட்ட பாஜக தலைவர் கே எஸ் பாபு கலந்து கொண்டு பொது மக்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய திருவிழா குறித்து எடுத்துரைத்தார். மேலும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், பெண்களுக்கு புடவைகளும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டி கலந்துகொண்ட சிறுவர்களுக்கு அனைவருக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஜீவானந்தம், கூரம் விஸ்வநாதன், பொதுச் செயலாளர் வாசன் , இளைஞரணி செயலாளர் ஜானகிராமன், விவசாய அணி செயலாளர் குமார் , சரவணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.