மக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களை காத்திடவும் மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகில் நீர் – மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் திறந்து வைத்து
பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், நுங்கு, நீர்மோர் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சியான பல்வேறு வகையான நீர்ச்சத்து அடங்கிய பொருட்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.